Thursday, February 14, 2019

இரணைமடு இடைக்கால அறிக்கை ஆளுநரிடம்

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு



கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment