
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படுத்தப்படும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
எரிக் பிரசன்ன வீரவர்தன இதற்கு முன்னர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment